திங்கள், 25 ஜூலை, 2011

நால் வருணம் வானில் நாம் காணும் பலகோடி அண்டங்களையும் ஒன்று கூட்டி நினைத்து அதனை பிரபஞ்சம் என்று கூறுகிறோம். எல்லா அண்டகளையும் சேர்ந்த ஒரு பெரிய இயக்கமாக இருப்பதால் அதனைப் பேரியக்கமண்டலம்,என்று நாம் கூறுகிறோம்.நாம் நட்சத்திரங்கலகக் காண்பது சுரியன்களே.அவற்றில் ஒன்று நாம் வாழும் நில உலகு இயங்கி வரும் சூரிய மண்டலம். நில உலகம் தோன்றிய பின் கணக்கிட முடியாத காலம் கடந்து ஓரறிவு உயிர் பொருளாகிய புல்,புண்டுசெடி,கொடி,மரங்கள் தோன்றின. பிறகு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டறிவு,மூவறிவு,நான்கறிவு,ஐயறிவுஉயிகளென விலங்கினம் விரிந்தன. சந்தர்ப்ப வசமாக இருவேறுபட்ட விலங்கினங்களின் உடலுறவில் இருந்து ஆதிகாலமனிதன் தோன்றினான். அந்தஒருமனிதனில் இருந்து கிளைத்து விரிந்தே மனிதசமுதாயம்.மனித இனம் விலங்கினங்களைப்போலவே இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக துய்த்து ஆறாவது அறிவாகிய சிந்தனை சிறப்புப் பெறாது கழிந்த காலம் மிகநீளம். எப்போது பூமியைக் கிளறி வித்தித்டுப் பயிராகிஇருப்பு வைத்து தானும் உண்டு பிறக்கும் வழங்கி வாழத் தெரிந்து கொண்டானோ, அதுவே மனிதன் ஆறாவது அறிவு ஒளிவிடத் தொடங்கியகாலம்.மனித இனம்தொடக்க காலத்தில்,ஆங்காங்குகிடைக்கும்.நிலவளம்,விளைபொருள்கள்,வாய்ப்பு இவற்றிர்கேற்பபொருட்களை உற்பத்தி செய்து பண்டமாற்றுமுறையில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வழ்ந்திரிந்தர்கள். பிறகு ஒரு குழுவினரோடு பிரகுழு கலப்புறுங்காலம் வந்தது.ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினருக்கு தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் மாற்றிக்கொள்ளும் தேவையும் ஏற்பட்டது. இவ்வாறு பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மற்றும் ஒரு புதிய தொழில் உண்டாயிற்று.இந்ததொழில் திறன்படச்செய்தவர்கள் வணிகர்களானர்கள்.இவர்களே வைசியர்கள் எனப்ட்டர்கள். பொருள் மிச்சம்,இடம் மாற்றம்,வணிகதொழில் என்றமூன்று நிலைமைகளால் வரியவன் எளியவனைத் தக்கிப்பொருள் பறிப்பதும், உயிர்கொலை என்ற வன்முறைச்செயல்கள் உருவாயின.சமுதாயக்கூட்டாக இதைத்தடுத்து எளியவர்களையிம் அவர்கள் உடமைகளையும் பாதுக்காக பொதுக்கவல்முறை ஏற்பட்டது.அதற்காக மக்காளால் நியமிக்கப்பட்ட உடல்வலிவும் போர்த்திறமையும் உள்ள தலைவன் தான் காவலன்.பிற்காலத்தில் ஏற்பட்ட பல மாறுதல்களையோட்டி காவலன் அரசன் எனப்பட்டான்.புலன் இன்ப வாழ்விலே மக்களில் பலர் நேறிதவறிய செயல்களாலும்,எண்ணங்களாலும் வாழ்வில் சிக்கல்கள் பலதோன்றின. பின்னர் இயற்கையை ஆராயும் சிந்தனையாளர்கள் மனிதசமுதாயத்தில் உருவானார்கள்.அவர்கள் அறிவைஉட்செலுத்தி உடலுக்குள் உயிரையும்,உயிரை நிலைக்கலனாகக் கொண்டுவிரிந்தது இயங்கும் அறிவையும் பேரியக்கமண்டல நிகழ்ச்சிகளுகுக்கெல்லாம் மூல ஆற்றலான இறைநிளையும் உணர்ந்தார்கள்.இவ்வகையில் அறிவுவிரிந்தது இயற்கையை உணர்ந்ததெளிவுலே மக்களுக்கும்,அரசுக்கும்,வணிகருக்கும் ஏற்படக் கூடிய வாழ்க்கைச் சிக்கல்களை அவ்வப்போது ஆராய்ந்து சிக்கல் தீர்த்து சீராகவாழும் முறைகளைப்போதனை செய்தார்கள்.இவர்கள் எல்லாவற்றையும் பர்ப்பவனாகிய அறிவு யார் என அறிவை நோக்கி உள்நோக்கிப் பார்க்கும் அகத்தவ முறையைப் பயின்றதால் பார்பனர் என்று,முடிவாக பெரியக்கமண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் தனது அழுத்தம் எனும் ஒரேஆற்றலால் துல்லியமாக இய்ங்கிவரச்செய்யும் ஆதியும்அனதியுமான மெய்பொருளை பிரம்ம நிலையை உணர்ந்தவர் என்ற உயர்கருத்தில் மெய்ஞானி,பிராமணர் என்றும்வழங்கப்பட்டனர். ஆழ்ந்து ஆராயுமிடத்து ஒரே சாதியானஉழைப்பாளி, எல்லார் வாழ்வுக்கும் ஆதாரமானவனயிருப்பதனால் சூத்திரன் என்ற மதிப்பைப் பெற்ற உளைப்பளியிருந்து தான் தேவைக்கும் காலத்திற்கும் ஏற்ப வணிகன்,அரசன்,மெய்ஞ்ஞானி என்ற மூன்று பிரிவுனரும் தோன்றியிருக்கிறார்கள். எந்தத் தொழிலையும் திறமையாக,சிறப்பாகவும் செய்யக்கற்றுக் கொள்ள கல்விக் கூடங்கள் இல்லாத காலத்தில்,தந்தை செய்த தொழிலையே மகனும் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் அந்தத் தொழிலை ஒட்டி சூத்திரன்(உழைப்பாளி),வைசியன்(வணிகன்),அரசன்(சத்திரியன்),மெய்ஞ்ஞானி (பிராமணன்),என்று பிரித்து பேசப்பட்டது.தொடர்ந்து பழக்கத்திற்கும் வந்துவிட்டது.இனி இன்றையநிலைமையைக் கவனிப்போம். விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு எவரும் எந்தத்தொளிளையும் கற்கலாம்,செய்யலாம் என்பதனால் தனியே சூத்திரன் என்பதுமறைந்துவிட்டது. எவர் என்றாலும் எல்லாருமே வாணிபம் செய்யலாம் என்ற வாய்ப்பு ஏற்பட்டுச்செயலிலும் வந்து விட்டது வைசியன் என்ற தனிப்பிரிவு போய்விட்டது. வக்குச்சீட்டுப் போட்டு எந்த குடிமகனையும் ஆட்சியாளனாகாக்கொண்டு வரலாம் என்ற நிலை ஆட்சிக்கு விட்டதால் சத்திரியன் என்றதனிப்பிரிவு மனிதசமுதாயலித்திருந்து விடை பெற்றுக்கொண்டது. விஞ்ஞானக் கல்வியால் எவரும் விண் அறிவும் நுண்ணறிவும் பெற வாய்ப்பும் அகத்தவ சாதனையால் எவர்முயன்றாலும் பிரம்மத்தை அறிந்து அறிவில் முழுமைபெறலாம்.மெய்ஞ்ஞானியாகலாம் என்ற சமுதயநிலை உருவகிவிட்டதல் தனியே பார்ப்பான் -பிராமணன் என்ற பிரிவு மறைந்து விட்டது. உழைத்துப் பொருள் ஈட்டும் உளைப்பளியிலேயே, சூத்திரநிலேயே நான்கு ஜாதிகளும் ஒன்ருபட்டுவிட்டது. இந்த உண்மையை உணர்ந்து சாதியால் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு காணமல் உலகம் ஒன்று,மனிதசமுதாயம் ஒன்று அதில் நாம் அனைவரும் உடன்பிரந்தவ்ர்களே என்ற விரிந்த நோக்கில் ஒருவருக்கு ஒருவர் உதவியும் எவரும் பிறருக்கு எவ்வகையிலும் தீமை செய்யாமலும் அறவழியில் நின்று வாழ்வோம்.அமைதியும் இன்பமும் கூடிய வாழ்வை அனுபவிப்போம்."வாழ்க வளமுடன்" -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

சனி, 23 ஜூலை, 2011

சிந்தனை விருந்து பூர்ணப் பொருள் பிரபஞ்சத்தில் காணும் எந்தப் பொருளும் அணுக்களின் கூட்டமே.சக்தி என்றாலும்,வேகம் என்றாலும் ஒன்றே.வேகம் என்பது பிறக்கும் இடம் அணுவேயாகும்.அணுவில் ஒரு வேகம் இருக்கின்றதென்றால் அது ஒரு குறைநிலையாக இருந்து நிறைவான ஒன்றை நாடி எழுகிறது என்பதுதான் பொருள்.குறை என்பது நிறைவான ஒன்றைஇணை வைத்தும்,ஆதாரமாகவும் கொண்டுஇருக்கும் ஒரு மாறுபட்டநிலை.ஆகவே அணு என்ற ஒரு குறை நிலைக்கு மூலமும் முடிவுமாக இருப்பது ஒரே பூரணப்பொருள்தான் என்று விளங்குகிறது. அணுவைக் கடந்த ஒரு பொருளோ, அணுநிலையைக் கடந்த ஒரு நிலையோ உண்டு எனில் அது வெட்டவெளியைத் தவிர வேறோன்ரும்மில்லை. ஆகவே,வெட்டவெளி என்ற தத்துவமை அனைத்திற்கும் ஆதாரமாகவும்,மூல சக்தியாகவும் உள்ளசர்வ வல்லமையும் உடைய ஒரு உறுதிபொருள் என்றும் அதுவேஆதியாகவும்,அனாதியகவும் உள்ள பூரணப்பொருள் எனவும் திடமாகக் கூறுகிறேன். இயற்கையில் ஆதி நிலை என்றும் சிவம் என்றும் தெய்வம் என்று பேசப்படுகிறது இதுவே. ஒரு மனிதன் விந்து நாதத் தொடர்பைப் பின் நோக்கி ஆராய்ந்து கொண்டே போனால் அது பல்லாயிரம் ஜிவராசிகளைக் கடந்து கடைசியாக அணுவிலேதான் போய் முடிவு பெறும்.அணுவின் மூலமோ மேலே விளக்கிய வெட்டவெளிதான் என்றும் தெரிந்துவிடும். அங்கிருந்து முன்நோக்கிப் பார்த்தல் பிரபஞ்சமாக விரிந்துள்ள அனைத்துமே ஒரே மூலத்தை அடிப்படயாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கு உண்மை அறிவுக்கு அகக்காட்சியாகும். வாழ்க வளமுடன்" -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 20 ஜூலை, 2011

உலக அமைதி 1.ஒரு நாட்டுக்கு நாடு அரசியல் முறை வேறுபட்டிருக்கும் வரைக்கும், 2.இயற்கை மூலதமான பூமியைத் தனிமனிதனோ அல்லது ஒரு குழுவினரோ தங்களுக்குக் சொந்தம் என்று எல்லைகட்டிக் வரைக்கும். 3.ஒரு மனிதன் முயற்சினால் விளைவிக்கும் எந்தபொருளும் எனிலும் அது அவனுக்கோ அவனுடைய வாரிசுகள் எனப்படும் குறிபிட்ட நபர்களுக்கோ தான் உரிமையானது என்ற கற்பனை முறை நீடித்திருகும் வரைக்கும். 4.குழந்தை வளர்ப்பு,முதியோர் பராமரிப்பு என்ற இரு வகையும் பெற்றோர்கள் மக்கள் இவர்கள் பொருப்பெளிருந்து விடுபட்டுச் சமுதாயப் பொதுவாக நடைபெறும் காலம் வரும்வரைக்கும் 5.வலிபப்பருவமும் உடல்வலிவும் உடைய அனைவருக்கும் அறிவிற்கும் உடலுக்கும் தகுந்தபடி ஆக்கத் தொழில் புரியும் வாய்ப்பு சமுதாயத்தில் கிடைக்கும் ஒரு அமைப்பு ஏற்படும் காலம்வரும்வரைக்கும். 6.உலகில் ஒரு மனிதனேனும் உணவு கிடைக்க என்ற காரணத்தால் பட்டினி கிடக்க நேரிடும் முறையில் நிர்வாகம் நடைபெறும் வரைக்கும். 7.உணவிற்காக வேறு ஒரு சீவனைக் கொள்ளலாம் பழக்கமும் அவசியமும் மனிதனுக்கு இருக்கும் வரைக்கும் உலக மக்கள் வாழ்வில் நிரந்தரமான அமைதி என்பது ஏற்படமுடியுமா? -அருட்தந்தைவேதாத்திரி மகரிஷி
உள்ளத்தின் சோதனை மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும் . நிலத்தின் ஊன்றும் வித்து எது வென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்துப் பயிராகி அதன் தன் தன்மைக்கேற் பயன் தருகிறது.அது போன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதி பெற்று வாழ்வின் பயனாக விளைந்து விடும் . ஆகவே நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ வளரவோ விடக் கூடாது. கோபம்,வஞ்சம்,பொறாமை,வெறுப்புணர்ச்சி,பேராசை, ஒழுக்கம் மீறிய காம நோக்கம்,தற்பெருமை,அவமதிப்பு,அவசியமற்ற பயம்,அதிகார போதை, என்ற பத்து வகையும் நமது உள்ளத்தில் நிலைபெறமல் ஒட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து, களைந்து கொண்டே இருக்க வேண்டும். இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ,நிலைப்பதற்கோ,இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறிவிடும். உடல் காந்த சக்தியை பாழாக்கிக் கொண்டே இருக்கும் ஒட்டைகளாக இக்கெட்ட குணங்கள் மாற்றி விடும். காலையிலும் மாலையிலும் 10 நிமிட நேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள்.30 நாட்களில்கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டுமகிளுகள். -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
மனிதனின் சிறப்பு உலகில் உள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த, மேலான ஒரு இயக்க நிலை மனித உருவம். இறைநிலையை முழுமையாக எடுத்துக் காட்டும் பிரதிபலிக்கும்,கண்ணாடி மனிதனே. உடலுக்குள் உயிர்,உயிரருக்குள்அறிவு.அறிவுக்குள் அருட்பேராற்றலலின் இயற்கை(மெய்ப்பொருள்) இவ்வாறு ஒன்றில் ஒன்றாக நிலைகொண்டு மனித உரு சிறப்பாக,வியத்தகு முறையில் இயங்கிக் கொண்டிக்கிறது உடல் குறிப்பிட்ட அளவு பருமனால் எல்லை உடையது.உயிரனாது நுண்ணியக்க மூலக்கூறான விண் எனும் நுண்துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்து ஒரு தொகுப்பாக இயங்கும் ஆற்றல்.இந்த உயிரானது உடலுக்குள் சுருங்கவும், உடலுக்குள் புறத்தே தக்க அளவு விரியவும் கூடியது. அறிவு என்பது உயிரை மையமாகக் கொண்ட மெய்பொருள் .உடல்முலம் ஆற்றிய வினைகளினால் பெற்ற அனுபவம்,சிந்தனை,கற்பனை இவற்றிர்கேற்ப விரிந்ததும்,சுருங்கியும்,செயல் புரியும் அற்றல்லுடையது.அறிவில் அடங்கியுள்ள ரகசியங்கள் எண்ணி அறிய முடியாதவை.எல்லாம்வல்ல முழுமுதற்போருளான மெய்ப்பொருள் உயிராற்றலலை மையமாகக்கொண்டு தனது அசைவினாலும்,உணர்வாலும் ஆற்றிய வினைப்பதிவுகளனைத்தும் அடக்கம் பெற்ற கருவுலம் அறிவு ஆகும் .இது உயிர்த்துகளின் மையத்தில் தொடங்கி,உயித்துகள் சுழற்சியால் விளையும் ஜிவகாந்த சக்தி முலம் உடல் வரையிலும், மேலும் உடலுக்கு வெளியே புலன்கள் மூலம் உணரும் பொருள்கள் வரையிலும்,யூகத்தால் பேரியக்க மண்டலம்,அதற்கப்பால் நிலைத்த சுத்தவெளி எனக் கருதப்படும் மெய்பொருள் வரையிலும் விரிந்தது சுருங்கும் இயல்பு உடையது. எல்லாம் வல்ல மெய்ப்பொருளே சுத்தவெளியகவும்,மெய்ப்பொருளாகவும் விண் முதல் மண் வரையிலான பஞ்சபூதங்களின் இணைப்பால் ஆகிய பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்துலும் இயக்க ஒழுங்காகவும் ,உயிகளிடத்தில் புலனுணர்வாகவும்,மனிதனிடத்தில் எல்லாமாக இருக்கும்,தான் முழுமையை உணரும் பேரறிவகாவும் இருக்கிறது. இந்த நான்கு தத்துவங்ளும் ஒன்றிணைந்த மாபெரும் வல்லமையுடைய அறிவிலும், செயலும் சிறந்ததோர் உருவம் மனிதன். -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2007

எளியமுறை குண்டலினி யோகம் மறதியும்-விழிப்பும் எளிய முறை குண்டலினி ஆக்கினைச் சக்கரம்
சாந்தியோகம்
துரிய நிலை
தற்சோதனை
துரியாதீதம்
சமுதாயச் சீர்திருத்தம் நாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம். குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்? காப்பு, தூய்மை, ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம். உடலிலே அழுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் படிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வழுக்கைப் போக்கி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம்.
ஐம்புலன்கள், கை, கால் முதலிய உடற் கருவிகளை இயக்கிக் கொண்டே இருக்கிறோம். அதனால் நரம்புகள் சோர்வடைகின்றன. நரம்புகளின் சோர்வைப் போக்கி முறுக்கேற்றிக் கொள்ள ஒய்வு கொள்ளுகிறோம் தூங்குகிறோம்.
பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.
இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன.
மறதியும்-விழிப்பும்
எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe) விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள். உயிரினங்களில் பாரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன். போரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும், இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான். உடற் கருவிகளின் சிறப்பாலும் அறிவின் சிறப்பாலும் இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக விருப்பம்போல மாற்றி அமைத்து துய்த்து மனிதன் வாழ்கிறான். தன் செயல் திறனிலும் புலன் கவர்ச்சியிலும் முழுவதும் ஈடுபட்டு, தன் உயிர் சிறப்பும் உயிரின் மூலச் சிறப்பும் மறந்து விடுகிறான். இதனால் அறிவு குறுகிய நோக்கில் செயல்படுகிறது பேராற்றல் பெற்ற இயற்கையே எல்லாமாகி தானுமாகி இன்ப துன்ப உணர்ச்சிகளால் எல்லைகட்டப் பெற்று இயங்கும் பேருண்மையை மறந்து தான் ஏதோ தனித்த பொருளாக இயங்குவதாகக் கருதி மயங்கி வாழ்கிறான். இத்தகைய புலன் மயக்க மறதியில் செயல் புரியும் ஆர்வமாக எழும் உயிர் விரைவு, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு மன உணர்ச்சி எண்ணங்களாக எழுகின்றன. பெரும்பாலும் மக்கள் இவ்வுணர்ச்சி மனோ நிலைகளில்தான் எண்ணம், சொல், செயல், இவற்றை ஆற்றுகின்றார்கள். இதன் விளைவாகத் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தைப் பெற்றும் அளித்தும் வாழ்கின்றனர்.
இயற்கை நியதியை உணர்ந்து பிறர் தேவைக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து முறையோடும் அளவோடும் ஆற்றும் செயல்களே நற்கர்மங்கள். இவற்றால் எல்லோரும் இன்பம் காத்து வாழலாம். இயற்கை நியதியை மறந்தும் மதியாமலும், சமுதாய மக்கள் கருத்தையும் நலனையும் மறந்தும் மறதியாலும் ஆற்றும் செயல்கள் எல்லாம் தீய வினைகளாகும்.
ஒரு மனிதன் தன்னைப் பழக்கிக் கொள்ளும்வாறு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்வினையோ தீவினையோ அவனிடம் தோன்றிக் கொண்டேயிருக்கும்.
எந்த செயலும் புலன்கள் உறுப்புகள் இவற்றில் இயக்கப் பதிவாக அமையும். எண்ணப் பதிவாக அமையும். வித்து அணுக்களில் பரம்பரைத் தரபதிவாக அமையும். இம்மூன்று பதிவுகளும் சேர்ந்து உயிரணுக்களில் பாரிணாமச் சிறப்பாற்றலாக அமையும். இவ்வாறு மனிதன் பெறும் பதிவுகளே வினைப்பதிவுகளாகும் (Impressions Of Deeds). இன்று உலகெங்கும் மனிதகுல வாழ்வில் அமைதி குலைந்து காணப்படுகிறது. பிணக்கும், பகையும், போட்டியும், போரும் வாழ்வில் துன்பங்களை மலியச் செய்து வருகின்றன. இவற்றிற்குக் காரணம் மனிதனேயாகும். தீவினைப் பதிவுகளால் தரக்குறைவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அறிவைப் புலன் கவர்ச்சியில் மயங்க வைத்துக் கொண்டு நினைவில் குறுகி நிற்கின்றான். தனக'கு மூலமான பேராதார நிலையை மறந்து விட்டான். இவையே துன்பங்கட்குக் காரணமாகும். உலகில் அமைதி நிலவவேண்டுமெனில், மனித குலம் இனிமை காத்து வாழ வேண்டுமெனில், தீய செயல் பதிவுகளை மாற்றி நற்செயல் பதிவுகளுக்குப் பழகிக் கொள்ளவேண்டும். தவறு புரிந்து ஏற்றுக் கொண்ட, உயிரணுக்களில் பதிவாகியிருக்கும், தீவினைப் பதிவுகளைப் (Impressions Of Sins) போக்கித் தூய்மைபெற வேண்டும். தனது உயிர் மூலம் அறிந்து அறிவில் தெளிவும் முழுமையும் பெற அறிவை ஒடுக்கி உள் நோக்கிப் பயில வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் உயிருக்குக்காப்பு, தூய்மை, ஓய்வு என்ற மூன்றும் கிடைக்கும். இவற்றிற்கான பயிற்சி முறைதான் நோன்பு என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.
இத்தகைய நோன்பு முறையை நமது முன்னோர்கள் இருவகையாகப் பிரித்தார்கள். அவற்றில் ஒன்று பக்தி நெறி மற்றொன்று ஞானநெறி. குழந்தை வயதுடையவர்களும் அறிவின் நுண்மை இல்லாதவர்களும் தெய்வ நிலையைக் கூர்ந்துணர்ந்து அதில் நிலைத்துப் பயில முடியாது. ஆகவே அவர்களுக்கு தெய்வ நிலையின் பெருமைய விளக்கி அதன் இருப்பு நிலையல் நம்பிக்கை வைத்து வணங்கவும், சமுதாய நலன் கெடாத வகையில் தனது இனிமை காக்கும் செயல்களையே புரிந்து வாழும் எண்ணம், சொல், செயல், பயிற்சிகளையும் வகுத்தார்கள். இதுவே பக்தி நெறியாகும். தெய்வ நிலையினைக் கூர்ந்துணரும் அறிவுடையோர்கள் முதலில் தனது உயிர் நிலையை உணரவும், பின் உயிரியக்க விரைவைப் படிப்படியாகக் குறைத்து நிலைத்து நின்று பரமாகி நிற்கவும் ஏற்ற தவ முறையே வகுத்தார்கள். இதன் மூலம் ஒரு மனிதன் தனது அறிவைப் பற்றி, உயிர் மூலத்தைப் பற்றி தெளிவாக உணர்ந்துக் கொண்டு வாழ்வாங்கு தானும் வாழ்ந்து வாழத் தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்டி உதவும் நெறியை வகுத்தார்கள். இதுவே ஞான நெறியாகும்.
காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்று வகையாலும் உடலோம்பல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே உயிரோம்பலும் மனிதனுக்கு இன்றியமையாதது என அறிந்தோம். உயிர் தூய்மைக்கான பக்தி நெறி, ஞான நெறி, இரண்டு வழிகளில் பக்தி நெறி மனிதனை ஒரளவு தான் பண்படுத்துகின்றது. ஞான நெறியின் மூலம் தான் அறிவின் முழுமைப் பேற்றை அடைய முடியும். ஞான நெறியால் தான் உயிரின் இருப்பு, இயக்கம், விரிவு இவற்றைப் பற்றி தெளிந்து முழுமையாக முடியும்.
பக்தி நெறியிலிருந்து ஞான நெறிக்கு உயர வேண்டுமெனில் மனதை உயிரில் ஒடுங்கி மனம், உயிர் இரண்டையும் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். உயிரின் இயக்க விரைவைக் குறைத்து ஞானப் பேற்றை அடைந்துப் பின் தன் மூல நிலையான நிறை நிலையை (தெய்வ நிலையை) அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற முறையான உளப்பயிற்சி அகநோக்குப் பயிற்சியாகும். இப்பயிற்சி முறைதான் யோகம் என்று கூறப்படுகின்றது.
மனதை உயிரில் ஒடுக்க வேண்டுமெனில், இயக்க மையத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் உயிர் பரவி இருந்தபோதும் அது மூலாதாரம் எனும் முதுகுத்தண்டின் கீழ்ப் புறத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. உயிராற்றலுக்குக் குண்டலினி சக்தியென்னும் ஒரு சிறப்புப் பெயருண்டு. இதனால்தான் குண்டலினி அமர்ந்திருக்கிறதென்று கூறுவது வழக்காயிற்று. உயிராற்றலான குண்டலிணி சக்தியின் இயக்க மையத்தை புருவ மையத்துக்கு மாற்றியமைத்தால்தான் மனதை அதில் ஒடுக்க முடியும். உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து மாற்றவும் பின் அதில் மனதை ஒடுக்கவும் ஏற்ற பயிற்சி தான் குண்டலினி யோகம்.
உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து எழுப்பிப் புருவ மையம் கொண்டு வர மூச்சுப் பயிற்சியைப் பின்பற்றினார்கள். நமது முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை நெற்றிக்குக் கொண்டு வர பல ஆண்டு காலம் தேவை. மேலும் அச்சக்தி ஏறிவரும் வழியில் சுவாதி\u202டிடானம் எனும் நீர் மையத்தையும், மணிப்புரகம் எனும் வெப்ப மையத்தையும், அனாகதமெனும் காற்று மையத்தையும், விசுத்தி எனும் புதாகாச மையத்தையும் கடந்து வரவேண்டியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இடப்பெயற்சி கொள்ளும்போது சில பல உடல் நோய்கள் காணும். அவற்றையெல்லாம் அனுபவித்துப் பெரு முயற்சியோடு தான் மேலேறி வரவேண்டும். இல்லறத்தில் வாழ்வோர்களுக்கு இம்முறை ஏற்றதல்ல.
எளிய முறை குண்டலினி
எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும். மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும். ஆக்கினைச் சக்கரம
உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும். அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம். ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.
தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.
சாந்தியோகம்
ஆக்கினைச் சக்கரமாகிய நெற்றிக் கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும். அப்போது தலை கனம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தி யோகப் பயிற்சிக்கு ஏற்றதாகும். அப்போது ஆசானை ஆண்டி சாந்தி யோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் சாந்தி யோக முறையறியாமல் பலர் குண்டலினி ஏற்றத்தைத் தாங்கும் சக்தியின்றி துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தி யோகம் தெரிந்துப் பயிலுதல் வேண்டும். துரிய நிலை
ஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும். உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். துரியநிலை யோகமானது ஆசான் தனது தவ ஆற்றலைக் கண்கள் மூலம் மாணவனுக்குப் பாய்ச்சிக் குண்டலினி சக்திக்கு ஒரு உயர் ஆற்றல் அளிக்கும் செயலாகும். மூளையின் நுண் பகுதிகளையெல்லாம் தூண்டி இயங்க வைக்கும் ஆற்றல் துரியநிலை யோகத்திற்கு உண்டு. இதன் மேண்மையினை எழுதி விளக்குவது அரிது. அவரவர்கள் அனுபவத்தால் பயனடைந்து விளங்கிக் கொள்ளவேண்டியது.
தற்சோதனை
துரியநிலை யோகத்தால் ஆன்மா தூய்மையடைந்து வரும்போதே தற்சோதனைப் பயிற்சியினைத் தொடங்க வேண்டும். எண்ணம், சொல், செயல் இவற்றின் விளைவறிந்து செயலாற்றும் ஒழுக்கப் பயிற்சியிலிருந்து தான் யார்? என்று தெளிந்து கொள்ளும் முழுமைப் பேறு வரையில் இப்பயிற்சி விரிவடைந்து பயன் தருகின்றது. ஒழுக்கம், கடமை, ஈகை, உயிர் விளக்கம், மெய் பொருள் விளக்கம் அனைத்தும் தற்சோதனை பயிற்சியினால் பெறப்படும்.
துரியாதீதம்
தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும். இதனைச் சமாதியென்றும், சீவப்பிரம்ம ஐக்கிய முக்தி என்றும் கூறப்படுகின்றது. மனிதனாகப் பிறந்தவன் அறிந்து முழுமைபெற வேண்டிய விளக்கம் அனைத்தும் அந்த யோகத்தால் சித்தியாகும்.
முறையாக இத்தகைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்றால் மனிதன் தனது அறிவில் முழுமை பெறலாம். உணர்ச்சி வயப்படாமல் சம மன நிலையில் கடமையாற்றி மகிழ்ச்சியோடு வாழலாம். வாழப் பறந்தவர்கள், வாழ்வை விளங்கிக் கொண்டுதானே வாழவேண்டும்? ஆகவே மெய்ஞ்ஞானம் எனும் அறிவின் விளக்கப்பேறு மனிதனுக்கு இன்றியமையாதது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வயதுக்கு வந்த உடன் பயின்று பலன் பெற வேண்டிய உளப்பயிற்சியே குண்டலினி யோகம்.
சமுதாயச் சீர்திருத்தம்
உலகில் பெரும்பாலான மக்கள் புலன் கவர்ச்சியில் மயங்கி, ஆன்ம நிலையை மறந்து அறுகுண வயமாகி வாழ்கின்றார்கள். துன்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பால்கவர்ச்சி விரைவில், மயக்கநிலையில் பெரும்பாலும் குழந்தைகள் உலகில் உற்பத்தியாகின்றன. அக்குழந்தைகளும் மயக்க நிலையில்தானே வாழ முடியும்? இந்த போக்கிலிருந்து உலகம் திருப்பம் பெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் குண்டலினி யோகம் கற்றுப்பயின்று முழுமை பெறவேண்டும். அப்போது தான் குடும்பத்தைத் திறமையோடு நடத்தும் ஆற்றல் வளருவதோடு அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகளும் அறிவின் விழிப்பு நிலைக்கு எளிதில் திரும்பிவிடும். இயற்கையான முறையில் கருத்தடைக்கும் குண்டலினியோகம் வழி செய்கிறது. உயிரியக்க மையத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை உண்டாகிவிட்டால் தேவையானபோது குழந்தைப் பேறு அடையவும், வேண்டாத போது அதனை தவிர்க்கவும் நுட்பம், ஆற்றல் இரண்டும் குண்டலினியோகத்தால் கிட்டும்.
பொதுவாகச் சொன்னால் குண்டலிணி யோகம் தனிமனித முழுமைக்கும், உலக சமுதாய நலணுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும். உயிர் நலம் பேணும் எல்லா முறைகளும் இந்த யோகத்தில் அடங்கியுள்ளன. இவ்வரிய யோகப் பயிற்சி முறையை விரும்புவோர் தகுதியுடையோர் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்கு உதவும் ஒரு அருள் நிலையமே உலக சமுதாய சேவா சங்கமாகும்.
இந்த சங்கத்தின் அருள் விளக்கப் பணி நிலையங்களே மனவளக்கலை மன்றங்கள். இப்போது பல மன்றங்களில் இச்சங்கக் கிளைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் இம்முறையைப் பரப்பி நலமளிக்க நம்மாலியன்ற தொண்டினைப் புரிவோம். இத்தெய்வீகத் தொண்டின் பெருமையுணர்ந்த அறிஞர்கள் பலர் ஞானாசிரியர்களாகப் பயிற்சி ஏற்றுள்ளனர். மேலும் பலர் முன் வரவேண்டும். இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் இந்த மனவளக்கலை முறை பரவ நாம் ஒன்றுகூடி செயலாற்றுவோம்.
நம்மை அளித்த உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்றாகக் கருதி உவகையோடு அருட்தொண்டு புரிவோம் வாரிர் என்று தவத்தில் தேர்ந்த அன்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றேன். இதனால் உங்கள் குடும்பக் கடமைகள் சிறிதளவும் குறைவு படாமல் இருக்கவும் விழிப்போடு இருக்கவேண்டும்.
இதுவரையில் ஞானம் என்ற துறையில் சில தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன.
அவை
ஞானம் என்பது எளிதில் மனிதனுக்குக் கிட்டாது.
இல்லறத்தார்களுக்கு ஞானம் ஏற்றதல்ல.
பெண்கள் ஞானத்திற்கு ஒவ்வாதவர்கள்.
ஞானம் பெற்றால் மனிதன் குடும்பத்தை மறந்து விடுவான்.
ஞானம் பொருளாதாரத் துறைக்கு எதிரான ஒன்று.
இவ்வகையான ஐவகைத் தவறான கருத்துக்களையும் திருத்தி இன்று எண்ணிறந்த மக்களுக்கு மெய்விளக்கம் அளித்திருக்கிறது நமது மனவளக்கலை மன்றங்கள். இத்தகைய மன்றங்கள் வளர வழி செய்து நம் கடனாற்றுவோம்.
பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.
இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 3 ஜூலை, 2007

மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு.
1. ரசம்
2. ரத்தம்
3. சதை
4. கொழுப்பு
5. எலும்பு
6. மஜ்ஜை மற்றும்
7. சுக்கிலம்
என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் 'சீவ இன அனைத்தடக்கப் பொருள்' தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.
உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.
இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன.
இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.
நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.
உதாரணமாக
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல் விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும் அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!
காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.
சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து 'மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி' என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.
முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி.
ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.
திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.
1. ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர் அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும் காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால் கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால் மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில் மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால் தீயவினை கள்கழிய உலகுக் கென்றும் தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா
2. கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும். காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும் நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும் இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும். மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!
காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.
சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
காயகற்பப் பயிற்சி பயன்கள்
உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும். மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும். தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும். மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.
இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி