புதன், 20 ஜூலை, 2011

மனிதனின் சிறப்பு உலகில் உள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த, மேலான ஒரு இயக்க நிலை மனித உருவம். இறைநிலையை முழுமையாக எடுத்துக் காட்டும் பிரதிபலிக்கும்,கண்ணாடி மனிதனே. உடலுக்குள் உயிர்,உயிரருக்குள்அறிவு.அறிவுக்குள் அருட்பேராற்றலலின் இயற்கை(மெய்ப்பொருள்) இவ்வாறு ஒன்றில் ஒன்றாக நிலைகொண்டு மனித உரு சிறப்பாக,வியத்தகு முறையில் இயங்கிக் கொண்டிக்கிறது உடல் குறிப்பிட்ட அளவு பருமனால் எல்லை உடையது.உயிரனாது நுண்ணியக்க மூலக்கூறான விண் எனும் நுண்துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்து ஒரு தொகுப்பாக இயங்கும் ஆற்றல்.இந்த உயிரானது உடலுக்குள் சுருங்கவும், உடலுக்குள் புறத்தே தக்க அளவு விரியவும் கூடியது. அறிவு என்பது உயிரை மையமாகக் கொண்ட மெய்பொருள் .உடல்முலம் ஆற்றிய வினைகளினால் பெற்ற அனுபவம்,சிந்தனை,கற்பனை இவற்றிர்கேற்ப விரிந்ததும்,சுருங்கியும்,செயல் புரியும் அற்றல்லுடையது.அறிவில் அடங்கியுள்ள ரகசியங்கள் எண்ணி அறிய முடியாதவை.எல்லாம்வல்ல முழுமுதற்போருளான மெய்ப்பொருள் உயிராற்றலலை மையமாகக்கொண்டு தனது அசைவினாலும்,உணர்வாலும் ஆற்றிய வினைப்பதிவுகளனைத்தும் அடக்கம் பெற்ற கருவுலம் அறிவு ஆகும் .இது உயிர்த்துகளின் மையத்தில் தொடங்கி,உயித்துகள் சுழற்சியால் விளையும் ஜிவகாந்த சக்தி முலம் உடல் வரையிலும், மேலும் உடலுக்கு வெளியே புலன்கள் மூலம் உணரும் பொருள்கள் வரையிலும்,யூகத்தால் பேரியக்க மண்டலம்,அதற்கப்பால் நிலைத்த சுத்தவெளி எனக் கருதப்படும் மெய்பொருள் வரையிலும் விரிந்தது சுருங்கும் இயல்பு உடையது. எல்லாம் வல்ல மெய்ப்பொருளே சுத்தவெளியகவும்,மெய்ப்பொருளாகவும் விண் முதல் மண் வரையிலான பஞ்சபூதங்களின் இணைப்பால் ஆகிய பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்துலும் இயக்க ஒழுங்காகவும் ,உயிகளிடத்தில் புலனுணர்வாகவும்,மனிதனிடத்தில் எல்லாமாக இருக்கும்,தான் முழுமையை உணரும் பேரறிவகாவும் இருக்கிறது. இந்த நான்கு தத்துவங்ளும் ஒன்றிணைந்த மாபெரும் வல்லமையுடைய அறிவிலும், செயலும் சிறந்ததோர் உருவம் மனிதன். -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி