புதன், 20 ஜூலை, 2011

உலக அமைதி 1.ஒரு நாட்டுக்கு நாடு அரசியல் முறை வேறுபட்டிருக்கும் வரைக்கும், 2.இயற்கை மூலதமான பூமியைத் தனிமனிதனோ அல்லது ஒரு குழுவினரோ தங்களுக்குக் சொந்தம் என்று எல்லைகட்டிக் வரைக்கும். 3.ஒரு மனிதன் முயற்சினால் விளைவிக்கும் எந்தபொருளும் எனிலும் அது அவனுக்கோ அவனுடைய வாரிசுகள் எனப்படும் குறிபிட்ட நபர்களுக்கோ தான் உரிமையானது என்ற கற்பனை முறை நீடித்திருகும் வரைக்கும். 4.குழந்தை வளர்ப்பு,முதியோர் பராமரிப்பு என்ற இரு வகையும் பெற்றோர்கள் மக்கள் இவர்கள் பொருப்பெளிருந்து விடுபட்டுச் சமுதாயப் பொதுவாக நடைபெறும் காலம் வரும்வரைக்கும் 5.வலிபப்பருவமும் உடல்வலிவும் உடைய அனைவருக்கும் அறிவிற்கும் உடலுக்கும் தகுந்தபடி ஆக்கத் தொழில் புரியும் வாய்ப்பு சமுதாயத்தில் கிடைக்கும் ஒரு அமைப்பு ஏற்படும் காலம்வரும்வரைக்கும். 6.உலகில் ஒரு மனிதனேனும் உணவு கிடைக்க என்ற காரணத்தால் பட்டினி கிடக்க நேரிடும் முறையில் நிர்வாகம் நடைபெறும் வரைக்கும். 7.உணவிற்காக வேறு ஒரு சீவனைக் கொள்ளலாம் பழக்கமும் அவசியமும் மனிதனுக்கு இருக்கும் வரைக்கும் உலக மக்கள் வாழ்வில் நிரந்தரமான அமைதி என்பது ஏற்படமுடியுமா? -அருட்தந்தைவேதாத்திரி மகரிஷி